Connect with us

Raj News Tamil

“முகத்தில் சிறுநீர் கழித்தார்கள்.. 150 முறை பாலியல் வன்கொடுமை” – அதிர வைத்த பெண்ணின் புகார்!

தமிழகம்

“முகத்தில் சிறுநீர் கழித்தார்கள்.. 150 முறை பாலியல் வன்கொடுமை” – அதிர வைத்த பெண்ணின் புகார்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திப்பட்டியைச் சேர்ந்தவர் 34 வயது மதிக்கத்தக்க பெண். இவருக்கு திருமணமாகி, ஒரு மகனும், மகளும் உள்ளனர். திருமண உறவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து வசித்து வருகிறார்.

இவரது குழந்தைகள், கணவரின் பரமாரிப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இவர் கட்டட வேலைக்கு சென்றபோது, மேஸ்திரி வேலை செய்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனை தவறாக புரிந்துக் கொண்ட முருகன், அந்த பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ளார்.

மேலும், அதனை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அவர், அதனை காட்டி மிரட்டி, அந்த பெண்ணை தொடர் பாலியல் வன்கொடுமைகளை செய்து வந்துள்ளார். இதுவரை, 150-க்கும் மேற்பட்ட முறை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முருகன் மட்டுமின்றி, அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொங்கி எழுந்த அந்த பெண், தர்மபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்த முருகன் மீதும், அவருடைய 3 நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த புகாரில் குறிப்பிட்ட பெண், தன்னை பாலியல் வன்கெடுமை செய்யும்போது, தன் மீது சிறுநீர் கழித்ததாகவும், கூறியுள்ளார். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுப்பாலியல் விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top