Connect with us

Raj News Tamil

போதையில் கிடந்த இளம்பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த ஆண்.. இறுதியில் வந்த எச்.ஐ.வி

உலகம்

போதையில் கிடந்த இளம்பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த ஆண்.. இறுதியில் வந்த எச்.ஐ.வி

பிரின்சஸ் க்ரூஸ் என்ற சொகுசு கப்பலில் ஏல நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏல நிகழ்ச்சியில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜேன் டோ என்ற 27 வயது பெண் கலந்துக் கொண்டார். அப்போது, ஏலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மது வழங்கப்பட்டது.

போதை தலைக்கு ஏறியதால், தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு அந்த பெண் சென்றுவிட்டார். இதனை கவனித்த ஆண் ஒருவர், அந்த பெண்ணை பின்தொடர்ந்து, அறைக்கு சென்றுள்ளார். பின்னர், அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

கப்பலில் இருந்து வீட்டிற்கு திரும்பிய சில நாட்களுக்கு பிறகு, அந்த பெண்ணிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில், அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்த ஆணிடம் இருந்து இவருக்கு பரவி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சில நாட்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அந்த ஆண் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top