சினிமா
அந்த இரண்டு படங்களை ரீ ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் – நிக்கி கல்ராணி
சமீப காலமாக தமிழில் வெளியாகும் புது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர்.
பாபா, முத்து, ஆளவந்தான், விருமாண்டி உள்ளிட்ட திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா திரைப்படமும் நேற்று வெளியானது.
இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் டார்லிங், மரகத நாணயம் இந்த இரண்டு படங்களையும் ரீ ரிலீஸ் செய்தல் நன்றாக இருக்கும் என்றும் இந்த இரண்டு படங்களும் எனது மனதிற்கு நெருக்கமானவை என்றும் கூறியுள்ளார்.