Connect with us

Raj News Tamil

இந்திய சுழலில் 218 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஆல் அவுட்!

விளையாட்டு

இந்திய சுழலில் 218 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஆல் அவுட்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்களும், பேர்ஸ்டோ 29 ரன்களும் அடித்தனர்.

இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4, ஜடேஜா 1 என விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top