இந்தியா
மக்களே உஷார்..!ஆதாா் இல்லைன்னா ரேஷன் காா்டில் பெயா் நீக்கம் உறுதி !
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளது.மேலும், ஆதார் எண் மூலமாக தான் அனைத்து தரப்பு அரசு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து அடையாள அட்டை மற்றும் ஆவணங்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சமீபத்தில் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவாின் ஆதாரும் நேரடியாக சோதிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. ரேஷன் உடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால் ரேஷன் கார்டில் இருந்து குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.