Connect with us

Raj News Tamil

14 , 16 வயசு பசங்க செய்ற வேலையா இது..!

இந்தியா

14 , 16 வயசு பசங்க செய்ற வேலையா இது..!

கர்நாடகாவில் உள்ள கலபுரகியில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த பத்து வயது சிறுமியை 14 மற்றும் 16 வயது சிறுவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் மும்பையில் கூலி வேலை செய்வதால் கர்நாடக கலபுரகியில் உள்ள உறவினர் வீட்டில் அந்த சிறுமி தங்கி படித்துவந்துள்ளார். இந்நிலையில் இச்சிறுமியை 14 மற்றும் 16 வயது சிறுவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோவாக எடுத்ததோடு இதை வெளியே சொன்னால் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து, கலகி காவல் நிலைய போலீஸார், சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 14 மற்றும் 16 வயது சிறுவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top