Connect with us

Raj News Tamil

கலாஷேத்ரா பாலியல் தொடர்பான வழக்கு : 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகம்

கலாஷேத்ரா பாலியல் தொடர்பான வழக்கு : 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாகக் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 3 ம் தேதி ஹரிபத்மனை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

More in தமிழகம்

To Top