சினிமா
ஹரிபத்மனுக்கு அபிராமி ஆதரவு – பதிலடி கொடுத்த சின்மயி!
கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன், முன்னாள் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, நடிகையும், கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவியுமான அபிராமி வெங்கடாசலம், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஹரிபத்மனுக்கும் குடும்பம் உள்ளது. அவர் மீது குற்றச்சாட்டை சுமத்தாதீர்கள். அவர் பக்க நியாயத்தையும் கேட்க வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், “பாலியல் வன்கொடுமை நடந்தால், அதனை உடனே வெளியில் தெரிவிக்க வேண்டும்.. பல வருடங்கள் கழித்து சொல்லக்கூடாது” என்றும் கூறியிருந்தார்.
இவரது இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த பாடகி சின்மயி, “உண்மையை எப்போது சொன்னாலும் அது உண்மை தான். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் உண்மை பொய்யாக மாறாது..” என்று தெரிவித்துள்ளார். “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல், புகாரில் சிக்கிய நபருக்கு ஆதரவாக பேசுகிறீர்களே” என்று நெட்டிசன்களும், நடிகை அபிராமியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login