Connect with us

Raj News Tamil

‘எனக்கு சொந்தமா சைக்கிள் கூட கிடையாது’….ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பேச்சு

அரசியல்

‘எனக்கு சொந்தமா சைக்கிள் கூட கிடையாது’….ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பேச்சு

ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது : கடந்த தேர்தலில் மக்கள் பா.ஜ., ஓட்டளித்து ஊழல் செய்து வந்த காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுத்தார்கள். அதன் விளைவாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது.

பாகிஸ்தான் தலைவர்கள் ராகுலை பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீஹார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தினமும் நக்சலைட்கள் பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளில் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர் என அவர் பேசினார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top