Connect with us

Raj News Tamil

துப்பாக்கி முனையில் 227 பள்ளி மாணவர்கள் கடத்தல்

உலகம்

துப்பாக்கி முனையில் 227 பள்ளி மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய சிலர் பள்ளிக்குள் புகுந்து 227 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவில் குரிகா என்ற சிறிய நகரில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடத்தப்பட்ட அனைத்து மாணவர்களையும் விடுவிப்போம் என்று பெற்றோருக்கு அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டிலும் இதே போல் 150 மாணவர்களை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்று பெற்றோர் பெரும் பிணைத் தொகையைக் கொடுத்து பல மாதங்களைக் கழித்து பிள்ளைகளை மீட்டனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top