ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற கூலித் தொழிலாளி :ஆனந்த் மஹிந்திரா கொடுத்த பம்பா் பாிசு!

உத்திரப்பிரதேச மாநிலத்தை சோ்ந்தவா் ராம் பிரபு. கூலித்தொழிலாளியாக வேலை பாா்ாத்துவந்துள்ள இவா்,பல்வேறு இன்னல்களை தாண்டி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா்.

இந்நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை பகிா்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற ராம் பாபூவுக்கு ஒரு போிஇன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். மஹிந்திரா கார்களில் இருந்து ராம் தனக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என்றும், அவருக்கு ஆதரவு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மூலம் தினசரி கூலி வேலைக்கு சென்ற ராம் இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவரது இந்த பயணத்திற்கு தனது பாராட்டுகளையும் ஆன்ந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

ராம் பாபு, உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை விவசாய கூலித் தொழிலாளியாக உள்ளார். தந்தையைப் போலவே இவரும் ஒரு கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். பாபுவிற்கு மூன்று சகோதரிகள் உண்டு, மாதம் 3000 ரூபாய் முதல் 3500 மட்டுமே ஈட்டக்கூடிய மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்த ராம் பாபு, தனது தடகள கனவை நிறைவேற்ற பல ஓட்டல்களில் சர்வராகவும் பணி செய்துள்ளார்.

Recent Posts

  • தமிழகம்

தமிழ்நாட்டில் பெருமை பேசுவான்…ஒடிசாவில் தமிழர்களை திருடன் என்பான் அவர் யார்?

ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை திருடர்கள் போல் விமர்சித்த பிரதமர் மோடியை உலக மகா நடிகன் என வன்மையாக கண்டித்து…

15 hours ago
  • தமிழகம்

யூடியூபர் இர்பான் மீது எந்த நடவடிக்கையும் இல்லை

பிரபல யூடியூபர் இர்பான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக தெரிவித்த காரணத்தால் அவரின் மீது…

16 hours ago
  • இந்தியா

உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு…

17 hours ago
  • இந்தியா

“எத்திலைன் ஆக்சைடு இல்லை” – MDH, எவரெஸ்ட் மசாலா பொருட்களை ஆய்வு செய்ததில் வந்த ரிசல்ட்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான மசாலா பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களாக இருப்பது, MDH மற்றும் எவரெஸ்ட் தான். இந்த நிறுவனங்களின்…

18 hours ago
  • இந்தியா

நிலக்கரி விற்றதில் ரூ.6000 கோடி ஊழல்..வசமாக சிக்கும் பாஜக?

2014-ல் அதிமுக ஆட்சியின்போது இந்தோனேசியாவில் வாங்கிய நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக அதானி நிறுவனம்…

18 hours ago
  • தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் இந்த உணவுக்கு தடை – பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள், திருசெந்தூர் முருகனை விரதமிருந்து தரிசித்து…

19 hours ago