தமிழகம்
திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் இந்த உணவுக்கு தடை – பக்தர்கள் அதிர்ச்சி
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பக்தர்கள், திருசெந்தூர் முருகனை விரதமிருந்து தரிசித்து விட்டு வெளியே வந்து, மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடிப்பது வழக்கமாகும். ஆனால், இந்தாண்டு கோயில் வளாகம் அருகே மீன் சமைத்து சாப்பிடக் கூடாது என்று கோயில் நிர்வாக இணை ஆணையர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில், மீன் சமைத்து சாப்பிட கோயில் நிர்வாகம் திடீர் தடை விதித்திருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.