Connect with us

Raj News Tamil

ஆன்லைன் கடன் செயலியால் பறிபோன உயிர்!

தமிழகம்

ஆன்லைன் கடன் செயலியால் பறிபோன உயிர்!

கடன் செயலி மூலம் வாங்கிய பணத்தை செலுத்திய பிறகும் மிரட்டல் விடுத்ததால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.

சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் கோபிநாத் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குயிக் மனி என்ற ஆப் மூலம் 5 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், அந்த கடனை திரும்ப செலுத்திய பிறகும், மீண்டும் பணம் செலுத்த வேண்டும் என்று, தொடர்ந்து கோபிநாத்தை அழைத்து மிரட்டி உள்ளனர்.

நீங்கள் கட்ட வேண்டிய தொகையை கட்டவில்லை மீண்டும் பணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் உங்களின் ஆபாச படத்தை எடுத்து உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த கோபிநாத் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார் இதனிடையில் நேற்று இரவு தனது படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக இருபது போல் அவர் கைபேசியில் இருக்கும் நண்பர்களின் தொடர்பு எண்ணை ஹேக் செய்து அனைவருக்கும் இந்த படத்தை அனுப்பி உள்ளனர்.

இதை அறிந்த கோபிநாத் இன்று காலை 7:45 மணிக்கு தனது whatsapp ஸ்டேட்டஸில் பெற்றோருக்கு எனது படத்தை அனைவருக்கும் பகிர்ந்து விட்டார்கள் ஆகையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறி தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது, இதை குறித்து எழும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேதத்தை கைப்பற்றி பிரதா பரிசோதனைக்காக சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top