Connect with us

Raj News Tamil

”வேலை வேணும்..” ஆசையாக வந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 23 வயது இளைஞன் செய்த கொடூரம்..!

இந்தியா

”வேலை வேணும்..” ஆசையாக வந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 23 வயது இளைஞன் செய்த கொடூரம்..!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வரும் பெண் ஒருவர், வேலை தேடி வந்துள்ளார். அப்போது, சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமான சுரஜ் திவாரி (23 வயது) என்ற நபர், தான் துணிக்கடை நடத்தி வருவதாகவும், அங்கு வேலை காலியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, அவரது கடையில் வேலைக்கு சேர்ந்த அந்த பெண்ணிடம், சுரஜ் திவாரி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். மேலும், அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருந்த அவர், அதனை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதன்காரணமாக அமைதியாக இருந்த அந்த பெண்ணை, தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல், சுரஜின் கொடுமையை தாங்க முடியாத அந்த பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த நபரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top