Connect with us

Raj News Tamil

ஓடும் ரயிலில் தங்க ஜெயினை பறித்த இளைஞருக்கு இறுதியில் நடந்த கொடூரம்!

இந்தியா

ஓடும் ரயிலில் தங்க ஜெயினை பறித்த இளைஞருக்கு இறுதியில் நடந்த கொடூரம்!

பெண்கள் சாலையில் நடந்து செல்லும்போது, அவர்களது கழுத்தில் அணிந்துள்ள தங்க சங்கிலிகளை, திருடர்கள் பறித்து செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இதில், சில திருடர்கள் லாவகமாக அங்கிருந்து தப்பித்துவிடுவார்கள்.

ஆனால், சில திருடர்கள் சிக்கி, சின்னபின்னமாகிவிடுவார்கள். அவ்வாறு, ரயிலில் பெண்கள் சென்றுக் கொண்டிருந்தபோது, தங்க சங்கிலியை பறிக்க முயன்ற திருடன், விபரீத விளைவை சந்தித்துள்ளான்.

அதாவது, இரண்டு பெண்கள் ரயில் பெட்டிகளுக்குள் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர், அங்கிருந்த இரண்டு பெண்களில் ஒருவரது காழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

அப்போது, நிலைத்தடுமாறிய அந்த திருடன், ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை பதிவிட்ட நெட்டிசன் ஒருவர், ரயிலில் பயணம் செய்யும்போதும் கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ, இதுவரை 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றதோடு, நெட்டிசன்களிடம் இருந்து பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top