Connect with us

Raj News Tamil

8 மாத குழந்தையின் உயிரை பறித்த மொபைல் சார்ஜர்!

இந்தியா

8 மாத குழந்தையின் உயிரை பறித்த மொபைல் சார்ஜர்!

கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதமே ஆன சானித்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

சந்தோஷ் கல்குட்கர் வழக்கம்போல தனது மொபைலுக்கு சார்ஜர் போட்டுள்ளார். பிறகு மொபைலை சார்ஜரில் இருந்து எடுத்து விட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்யாமலே விட்டு சென்றுள்ளார்.

அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சார்ஜர் வயரை எடுத்து வாயில் வைத்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அங்கு வந்த தாய் சானித்யா மூச்சு பேச்சின்றி கிடந்த குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top