இந்தியா
ஆந்திராவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பவானி பட்டணம் புறப்பட்டு சென்று கொண்டிருந்த ராயகட்ட பேசஞ்சர் ரயில் கொத்தவலச ரயில் நிலையத்தை கடந்து சென்று டிராக் மாறியபோது ரயில் இன்ஜின் திடீரென்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
இரவு 7 மணி அளவில் விபத்து ஏற்பட்ட நிலையில் லோகோ பைலட் சுதாரித்து கொண்டு ரயிலை நிறுத்தி விட்டார். இதனால் ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
உடனடியாக ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு அந்த வழியாக சென்ற பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவற்றை பிடித்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
ரயில்வே போலீசார், ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் விரைந்து சென்று தடம் புரண்ட ரயில் இன்ஜினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் எஞ்சின் தடம் புரண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்துகின்றனர்.