தமிழகம்
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் திடீர் கைது..!!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக நிறுவனத்தை தொடங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன் மீது ஏற்கனவே ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில், பூட்டர் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் ஒரு வர்த்தக ரீதியான நிறுவனத்தை ஜெகநாதன் தொடங்கியதாக தெரிகிறது.
ஒரு அரசாங்க பதவியில் இருப்பவர், பிற வருமானம் ஈட்டும் தொழிலில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். அதுவும் ஜெகநாதன் பெரியார் பல்கலைக்கழத்திலேயே இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் தனக்கு தெரிந்தவர்கள் பலரையும் அந்த நிறுவனத்தில் பங்குதாரரராக அவர் சேர்த்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் பேரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் விசாரணை நடத்தி வந்த போலீஸார், இன்று அவரை கைது செய்தனர்.