Connect with us

Raj News Tamil

நடைப்பயிற்சி சென்ற தம்பதி: வளர்ப்பு நாய் கடித்து குதறியது!

தமிழகம்

நடைப்பயிற்சி சென்ற தம்பதி: வளர்ப்பு நாய் கடித்து குதறியது!

சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(43). தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வரும் இவர் நேற்று காலை தனது மனைவி நீலா (40) உடன் வீட்டு அருகே நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவர் வளர்த்து வரும் தெரு நாய் ஒன்று நீலாவின் தொடையில் கடித்து குதறியது‌. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் சுரேஷ் நாயை விரட்ட முயன்ற போது நாய் அவரையும் விடாமல் துரத்திச் சென்று காலில் கடித்தது.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே நாயிடம் இருந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து நீலா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தெரு நாயை வளர்த்து வரும் மல்லிகாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top