Connect with us

Raj News Tamil

இறுதி போட்டி; முதலில் இந்திய அணி பேட்டிங்: பிரதமர் மோடி வாழ்த்து!

விளையாட்டு

இறுதி போட்டி; முதலில் இந்திய அணி பேட்டிங்: பிரதமர் மோடி வாழ்த்து!

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரானப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இதில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “140 கோடி இந்திய மக்களும் இந்திய அணிக்கு ஆதரவாய் உள்ளார்கள். இந்தப் போட்டியில் மிகவும் நன்றாக ஆடி, விளையாட்டை மேம்படுத்துங்கள். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

More in விளையாட்டு

To Top