Connect with us

Raj News Tamil

ஏா்பாட்டை மாத்திரை என நினைத்து முழுங்கிய பெண்மணி! வைரலாகும் காணொளி!

உலகம்

ஏா்பாட்டை மாத்திரை என நினைத்து முழுங்கிய பெண்மணி! வைரலாகும் காணொளி!

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரின் ஆப்பிள் ஏர்பாட் ப்ரோவை வைட்டமின் மாத்திரைகள் என்று தவறுதலாக நினைத்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான டான்னா பார்கர் என்பவர் காலை நடைபயிற்சியின் போது நீண்ட கால தோழி ஒருவரை சந்தித்துள்ளார் .அப்போது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார் பார்கர்.

உரையாடலில் மூழ்கி இருந்த பார்கர் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள நினைத்துள்ளாா் ,வைட்டமின் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது ஏர்பாட் ப்ரோவை தவறுதலாக விழுங்கினார். இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய பார்கர் நடந்தவற்றை தனது கணவரிடம் கூறினார். மேலும் , உடனடியாக மருத்துவரை அணுகிய பார்கர் தற்போது நலமாக உள்ளார். இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தளத்தில் பார்கர் பதிவிட்ட வீடியோவை இதுரை 2.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top