தமிழகம்
ஆவடியில் சாலையில் வாகனங்களை வழிமறித்து அச்சுறுத்திய வாலிபர்!
வாலிபர் காரை மடக்கி அச்சுறுத்துவதும் இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பம் தவறி விழுந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
சென்னை ஆவடி சென்னை திருப்பதி பிரதான சாலையில் வழக்கம் போல வாகனம் பயணித்து வந்த நிலையில் சாலையின் நடுவே அரைகுறை ஆடையுடன் வாலிபர் கையில் கட்டையுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்துள்ளார்.
மேலும் அவ்வழியே சென்ற வெள்ளை நிற ஹோண்டா காரினை வழிமறித்த அந்த ஆசாமி முன் பின் நகர விடாமல் கையில் வைத்திருந்த கட்டையால் காரினை தாக்குவது போல பாவலா செய்து அச்சுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து அவ்வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்து வந்துள்ளார். சாலையின் நடுவே நின்று அச்சுறுத்தி வந்ததை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்று தவறி விழுந்துள்ளனர்.
இதில் அவர்களின் குழந்தை கிழே விழுந்து தலை தரையில் மோதி குழந்தை மயக்கம் அடைந்து தாய் மற்றும் தந்தை அலறி கொண்டு அவ்வழியே சென்ற காரில் ஏற்றி செல்லும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் சாலையில் செல்வோரையெல்லம் அச்சுறுத்தி குழந்தையை தாக்கியதாக கூறி பொதுமக்கள் அந்த வாலிபர் மீது தாக்குதல் நடத்திய காட்சிகளும் எடுத்து அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் பொதுமக்களிடமிருந்து அந்த வாலிபரை மீட்டு முதலுதவி அளித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த வாலிபர் அதீத போதையில் இருந்தாரா அல்லது மனநலம் பாதிக்கபட்டவரா என சந்தேகம் எழுந்துள்ளது.