தமிழகம்
இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திமுக ஆட்சி 3 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, இது சொல்லாட்சி, செயலாட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
“இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!”
மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!
நம்பிக்கையோடு முன்செல்கிறேன்… பெருமையோடு சொல்கிறேன்…
“தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” என்று தெரிவித்துள்ளார்.