Connect with us

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருப்பூர் மாணவி சாதனை..!

தமிழகம்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருப்பூர் மாணவி சாதனை..!

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி சஸ்மிதா வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த 15ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை புதுடெல்லி சத்ரசால் மைதானத்தில் ஸ்கூல் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த 150 கராத்தே மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் புது ராமகிருஷ்ணபுரம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் சஸ்மிதா தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றார். தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவி சஸ்மிதாக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

More in தமிழகம்

To Top