Connect with us

Raj News Tamil

திருப்பூரில் நடந்த சாலை விபத்தில் திமுக கவுன்சிலர் பலி..!!

தமிழகம்

திருப்பூரில் நடந்த சாலை விபத்தில் திமுக கவுன்சிலர் பலி..!!

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே செட்டிபாளையம் பகுதியில் வசித்தவர் சந்தோஷ் குமார் (27). இவர் செட்டிபாளையம் பேரூராட்சியில், 10 ஆவது வார்டு கவுன்சிலராகவும், திமுக வட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் தனது மனைவி இந்துமதி மற்றும் 6 மாத பெண் குழந்தையுடன் தனக்கு சொந்தமான காரில் கோவையில் இருந்து ஈரோட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சந்தோஷ் குமார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சந்தோஷ்குமார், அவரது 6 மாத பெண் குழந்தை காஜல் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சந்தோஷ் குமாரின் மனைவி இந்துமதி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். சுயநினைவின்றி மீட்கப்பட்ட அவர், திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய நபர் கோவை செளரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்தார்த் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More in தமிழகம்

To Top