Connect with us

Raj News Tamil

அரசு பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து – 6 பேர் பலி..!!

இந்தியா

அரசு பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து – 6 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சின்ன வரம்பாடு என்ற இடத்தில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 6 பேர் இறந்தனர். 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி சென்று கொண்டுருந்த ஆந்திர மாநில அரசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.2 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More in இந்தியா

To Top