Connect with us

நிருபராக மாறி வீதியில் உலா ! டாப் கிளாஸ் நட்சத்திரத்தின் அதிரடி செயல் !

விளையாட்டு

நிருபராக மாறி வீதியில் உலா ! டாப் கிளாஸ் நட்சத்திரத்தின் அதிரடி செயல் !

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 33வது லீக் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் இன்று காலை ரசிகர்களை வித்தியாசமான அவதாரத்தில் சந்தித்தார்.

அதாவது , கையில் கேமராவுடன், முகத்தில் மாஸ்க் அணிந்த படி மும்பை வீதியில் வலம் வந்த அவர், ரசிகர்களிடம் தன்னை நிருபர் என அறிமுகப்படுத்திக்கொண்டு இந்திய அணி குறித்து பேட்டி எடுத்தார். அப்போது ரசிகர்கள் தங்கள் பதில்களை அளிக்க, சிறிது நேரம் கழித்து மாஸ்க்கை அகற்றிவிட்டு ரசிகர்கள் முன் நின்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

இதனையடுத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்ட சூர்யகுமார் யாதவ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதேபோன்று, தனது சக அணி வீரரான ரவீந்திர ஜடேஜாவையும் நிருபரை போல் சென்று சந்தித்து சூர்யகுமார் யாதவ் அதிர்ச்சியளித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top