தமிழகம்
சென்னை மெரினாவில் நாளை இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை
சென்னையில் புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க சென்னை காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மொத்தம் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னை மெரினாவில் நாளை இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் * புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது என காவல்துறை தெரிவித்துள்ளது.