Connect with us

Raj News Tamil

சபாஷ்..!ஒரு நாள் பிாிட்டன் தூதரானார் சென்னை இளம்பெண்!

இந்தியா

சபாஷ்..!ஒரு நாள் பிாிட்டன் தூதரானார் சென்னை இளம்பெண்!

டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் கடந்த 2017-ம் ஆண்டு முதலாகவே ‘ஒரு நாள் தூதரக உயர் அதிகாரி’ என்ற போட்டிய
மேற்கெண்டு வருகிறது

இந்நிலையில்,சர்வதேச பெண் குழந்தை தினத்தை (அக்டோபர் 11-ந்தேதி) கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் இந்த போட்டி நடத்தப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஸ்ரேயா தர்மராஜன் வெற்றி பெற்றார்.இதன் மூலம் அவர் ஒரு நாள் முழுவதும் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த போட்டியின் மூலம் ஒரு நாள் தூதரக உயர் அதிகாரியான 7-வது பெண் ஸ்ரேயா தர்மராஜன் ஆவார். டெல்லியில் உள்ள கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவா்ஷ, தற்போது மும்பையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top