Connect with us

Raj News Tamil

சுரங்க பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் – முதல்வர் அறிவிப்பு

இந்தியா

சுரங்க பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் – முதல்வர் அறிவிப்பு

உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்த அபார மீட்புப் பணியின் வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.

அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

இந்நிலையில் சுரங்க பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்கள் ஊதியம் பிடித்தம் செய்யாமல் 15 முதல் 30 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

More in இந்தியா

To Top