Connect with us

Raj News Tamil

இளையான்குடியில் வெறி நாய் கடித்து குதறியதில் 18 பேர் காயம்!

தமிழகம்

இளையான்குடியில் வெறி நாய் கடித்து குதறியதில் 18 பேர் காயம்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை இளையான்குடி சுற்றுவட்டார பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் என ஏராளமானோரை வெறிபிடித்த நாய் ஒன்று கடித்து குதறியது.

இதில் 18 நபர்களை தொடர்ச்சியாக கடித்துக் குதறியதில் காயம் அடைந்தவர்கள் இளையான்குடி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாய் கடித்த 18 பேரும் இளையான்குடி மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. நாய் கடித்ததில் காயமுற்ற ஒவ்வொருவருக்கும் கை மற்றும் காலில் தையல்கள் போடப்பட்டுள்ளது.

18 பேரை ஒரே நேரத்தில் வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளையான்குடி பகுதியில் கடந்த சில தினங்களாகவே வெறிநாய் தொல்லை இருந்து வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இது பற்றி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது இளையான்குடி பேரூராட்சி நிர்வாகம் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இளையான்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top