Connect with us

காணாமல் போன ராணுவ வீரர்…தீவிரமாக தேடும் பாதுகாப்பு படை..!!

இந்தியா

காணாமல் போன ராணுவ வீரர்…தீவிரமாக தேடும் பாதுகாப்பு படை..!!

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார். காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த அவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் சந்தையில் இருந்து சில பொருட்களை வாங்குவதற்காக காரில் சென்றுள்ளார். இரவு 9 மணி ஆகியும் அவர் திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடத் தொடங்கினர். அவர் ஓட்டிய கார் சந்தை அருகில் ரத்தகறையுடன் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் சிலரைக் கைது செய்துள்ளனர். மேலும் அந்த ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக சந்தேகித்து, ராணுவ வீரரின் குடும்பத்தினர், வீடியோ அறிக்கையை வெளியிட்டு, அவரை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top