இந்தியா
கர்நாடகாவில் மாரடைப்பால் உயிரிழந்த 12 வயது சிறுவன்!
கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி. இவர் தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் இவருடைய மகன் கீர்த்தன்(12) 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கீர்த்தனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அந்த சிறுவனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login