Connect with us

Raj News Tamil

கடைக்கு சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர்..!!

தமிழகம்

கடைக்கு சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர்..!!

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பாண்டியன் என்ற 65 வயது முதியவர் சிறுமியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பெயரில் நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் தலைமறைவாக இருந்த முதியவர் பாண்டியனை எண்ணூரில் கைது செய்து இராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அங்கு பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top