Connect with us

Raj News Tamil

மது போதையில் பெற்ற தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிய நபர்!

தமிழகம்

மது போதையில் பெற்ற தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிய நபர்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கரையூர் கிராமத்தில் ஈஸ்வரன்(45) என்பவர் தனது மனைவி(38) மற்றும் மகள்(13) நதியாவுடன் வசித்து வந்தார். திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள் நதியாவை மதுபோதையில் ஈஸ்வரன் அரிவாளால் வெட்டியிருக்கிறார். பின்னர் வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த அவரது தாய் செல்லாயி(75) மற்றும் பெரியனாண்டி அம்பலம் (75) என்ற முதியவரை வெட்டியுள்ளார். இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்த 2 மாடுகளையும் வெட்டி உள்ளார். மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள் ஈஸ்வரனின் செயலால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈஸ்வரனை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் போலீசார், செல்லாயி மற்றும் பெரியனாண்டி அம்பலம் ஆகியோரது உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மகள் நதியாவை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

More in தமிழகம்

To Top