இந்தியா
புகைமூட்டமாக காட்சியளித்த பஞ்சாப்..!தீப்பிடித்து எரிந்த டேங்கா் லாரி..!
பஞ்சாப்பில், மேம்பாலத்தின் ஒன்றில் சாலை நடுவே டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. பஞ்சாப் மாநிலம் கண்ணா பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள மேம்பாலத்தின் மீது எண்ணெய் டேங்கர் லாரி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது.
டேங்கர் லாரி கவிழ்ந்ததில், எண்ணெய் சாலையில் கொட்டி பல மீட்டர் தூரம் கசிந்து, தீ விபத்துக்குள்ளானது. இதில், தீ சாலை முழுவதும் பரவி, மேம்பாலம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், நெடுஞ்சாலையை புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.