Connect with us

Raj News Tamil

8 மாத பெண்குழந்தையை 800 ரூபாய்க்கு விற்ற பெண்…அதிர்ச்சி காரணம்

இந்தியா

8 மாத பெண்குழந்தையை 800 ரூபாய்க்கு விற்ற பெண்…அதிர்ச்சி காரணம்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு. இவருடைய கணவர் தமிழ்நாட்டில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் கராமி முர்முவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் வறுமையின் காரணமாக குழந்தை இல்லாத தம்பதி ஒருவருக்கு கராமி முர்மு தனது குழந்தையை 800 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த அந்த பெண்ணின் கணவர் 2 வது குழந்தையை பற்றி கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக போலீசில் புகார் அளித்த போது குழந்தை 800 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக குழந்தையின் தாய் கராமி முர்மு, அதை வாங்கிய தம்பதி, அதற்கு ஏற்பாடு செய்த நபர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

More in இந்தியா

To Top