இந்தியா
காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் காவல்நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் கிர்த்தி அஞ்சி(25) என்ற இளைஞர், பெண் ஒருவரின் வீடு மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது அவர் காவல்நிலையத்தில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு இருந்த போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது உடனே அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கிர்த்தி அஞ்சியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்த விடியோவையும் வெளியிடப்பட்டது. காவல்நிலையத்தில் இளைஞர் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.