சினிமா
அவரு மட்டும் செத்து போயிட்டா நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் – நடிகை ரேகா நாயர் ஆவேசம்
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேகா நாயர். இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்தார். இது சர்ச்சையை கிளப்பியது.
ரேகா நாயர் குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மிக மோசமாக விமர்சனம் செய்தார். இதையடுத்து திருவான்மியூரில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனை வழிமறித்த ரேகா நாயர் அவரை கடுமையாக திட்டினார்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் குறித்து ரேகா நாயர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் : நான் என் வாழ்க்கையில் பட்டாசு வெடிச்சதே இல்லை. பயில்வான் ரங்கநாதன் செத்தா நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். அன்னைக்கு தான் எனக்கு தீபாவளி என அவர் பேசியுள்ளார்.
You must be logged in to post a comment Login