Connect with us

Raj News Tamil

இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது: ஈரான் அதிபர்!

உலகம்

இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது: ஈரான் அதிபர்!

பாலஸ்தீன மக்களைக் கொல்லவும், கொடூரமான கொடூரமான செயல்களை செய்யவும் இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரான் அதிபர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களைக் கொல்லவும், கொடூரமான கொடூரமான செயல்களை செய்யவும் இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது. குண்டுவெடிப்புகள் விரைவில் நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் . ஒடுக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான இந்தக் கொடூரமான குற்றங்கள் அனைத்தும் ஓர் இனப் படுகொலை. இது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சியோனிச ஆட்சியால் (இஸ்ரேல்) நடத்தப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

More in உலகம்

To Top