Connect with us

Raj News Tamil

மகளிடம் தாய் எழுப்பிய கேள்வி.. பதிவாக போட்ட பெண்.. இணையத்தில் எழுந்த சிரிப்பொலி..

உலகம்

மகளிடம் தாய் எழுப்பிய கேள்வி.. பதிவாக போட்ட பெண்.. இணையத்தில் எழுந்த சிரிப்பொலி..

தாய்க்கும், மகளுக்கும் எப்போதும் மிகவும் நெருக்கமான பிணைப்பு உள்ளது. இருவரும், எந்தவொரு விஷயமாக இருந்தாலும், தங்களுக்குள் பரிமாறிக் கொள்வார்கள். ஆனால், சில சமயங்களில் தாய் கேட்கும் கேள்விகள், சில நகைச்சுவையான தருணங்களுக்கு வழிவகுத்து விடுகின்றன.

இதுமாதிரியான பல தருணங்களை, சில நெட்டிசன்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அது வைரலாகவும் செய்துள்ளன. இந்நிலையில, பெரிஸ் என்ற பெண், தனது சமூக வலைதளங்களில், தனது தாயை பற்றி வெளியிட்ட பதிவு, இணையத்தில் சிரிப்பொலியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருபவர் பெரிஸ். இவர், மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் எக்ஸ் பக்கத்தில், தனது தாயை பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், நீ ஒரு அறுவை சிகிச்சை நிபுணரா? என்று தாய் கேட்டதாக கூறியுள்ளார். மேலும், என்னுடைய மருத்துவ பயிற்சியை தொடங்கி 4 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இப்போது என்னுடைய தாய், இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்.

அதாவது, தனது மகள் மருத்துவர் ஆகிவிட்டார் என்பதை கூட அறியாத தாயின் இந்த வெகுளித்தனமான கேள்வியை, அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு, பலரும் பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்னர். இந்த வீடியோ, இதுவரை 2 லட்சம் பார்வையாளர்களை பெற்றதோடு, வைரலாகவும் பரவி வருகிறது.

More in உலகம்

To Top