Connect with us

Raj News Tamil

மாதவரத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

தமிழகம்

மாதவரத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

மாதவரம் அசிசி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார் இவருடைய மனைவி வளர்மதி வீட்டு வேலை செய்து செய்து வருகிறார் இவருடைய மகன் பிரபு மாதாவரத்தில் உள்ள புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.

நேற்று மாலை பிரபு தன் தாயாரிடம் சாப்பிடுவதற்கு முட்டை தோசை கேட்டுதாகவும், அப்பொழுது வீட்டில் முட்டை இல்லை என்றும் தான் வீட்டு வேலைக்கு சென்று விட்டு வருகின்ற வழியில் வாங்கி வருவதாக கூறிவிட்டு பிரபுவின் தாயார் வளர்மதி வேலைக்கு சென்றுள்ளார்.

அதன் பின்பு இரவு வீடு திரும்பிய வளர்மதி வெகு நேரமாக கதவை தட்டி உள்ளார். பிரபு கதவை திறக்காமல் இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்த பிரபுவின் தாயார் வளர்மதி அக்கம் பக்கத்தினரை அழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது பிரபு வீட்டினுள் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் மாதவரம் பால்பண்ணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து பிரபுவின் மரணத்திற்கான காரணத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top