Connect with us

இந்திய கடல் பகுதியில் தாக்குதல் !தீப்பிடித்து எரிந்த கப்பல் !

இந்தியா

இந்திய கடல் பகுதியில் தாக்குதல் !தீப்பிடித்து எரிந்த கப்பல் !

செளதி அரேபியாவிலிருந்து எம்.வி. செம் புளூட்டோ என்ற வணிகக் கப்பல் மங்களூருக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்தது. இந்த கப்பல், குஜராத்தின் போர்பந்தரிலிருந்து கடலுக்குள் 217 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், இந்த கப்பலில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இக்கப்பலில் இந்தியர்கள் 20 பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் கப்பல் தீப்பிடித்தது குறித்து அறிந்த இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படையின் கப்பல் ‘ஐசிஜிஎஸ் விக்ரம்’ ஆகியவை, ‘எம்.வி. செம் புளூட்டோ’ கப்பலை நோக்கி சென்றனா்.

பின்னா் , அங்கிருந்த கிடைத்த தகவலின்படி ,கப்பலில் உள்ள 20 இந்திய மாலுமிகளும் பத்திரமாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை கப்பல்கள் மட்டுமின்றி, அந்த பகுதியைக் கடந்து செல்லும் இதர கப்பல்களுக்கும், ‘எம்.வி. செம் புளூட்டோ’ கப்பலுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டுள்ளது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top