Connect with us

Raj News Tamil

தேர்தலில் வெற்றி பெற்றால் மதுவுக்கு கூடுதல் பணம் கேட்பதை தடுப்பேன் என கூறிய வேட்பாளர்

தமிழகம்

தேர்தலில் வெற்றி பெற்றால் மதுவுக்கு கூடுதல் பணம் கேட்பதை தடுப்பேன் என கூறிய வேட்பாளர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் இடைதேர்தலில் போட்டியிட உள்ளார்.

இதுகுறித்து ஆறுமுகம் கூறும்போது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். இதற்காக பாட்டில் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். டெபாசிட்டுக்காக ஒவ்வொரு டாஸ்மாக் கடையாக சென்று காலி மதுபான பாட்டில்களை சேகரித்து வருகிறேன்.

தேர்தலில் வெற்றி பெற்றால் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதை தடுப்பேன். மேலும் மதுவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விதவைப் பெண்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்க சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என அவர் கூறினார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top