Connect with us
Raj News Tamil

Raj News Tamil

பேருந்தில் பாலியல் தொல்லை.. நடத்துனருக்கு 70 ஆண்டு சிறை..

தமிழகம்

பேருந்தில் பாலியல் தொல்லை.. நடத்துனருக்கு 70 ஆண்டு சிறை..

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். 49 வயதான இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், பேருந்தில் பயணித்த 10 மாணவிகளுக்கு, சரவணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவிகள், காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சரவணனுக்கு 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் 10 பேருக்கும், தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.

More in தமிழகம்

To Top