Connect with us

Raj News Tamil

சிறுமியை 4 மாத கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது..!

தமிழகம்

சிறுமியை 4 மாத கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது..!

காரைக்கால் எம்.ஜி.ஆர்.நகர் அம்மன் கோவில்பத்தை சேர்ந்த முகமது அலி(27) என்பவர் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 4 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காரைக்கால் நகர் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது அலியை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

More in தமிழகம்

To Top