Connect with us

Raj News Tamil

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது

தமிழகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் உடை அணிந்த ஒரு நபர் தன்னை டிக்கெட் பரிசோதகர் எனக்கூறி பயணிகளின் டிக்கெட்டுகளைப் பரிசோதித்தபடியே, தன்னிடமிருந்த போலியான பயண சீட்டுகளை விற்பனை செய்துள்ளார்.

இதனை பார்த்த பயணி ஒருவர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் அந்த நபரை, ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வெங்கட் கிஷோர் (42) என்பதும், புறநகர் ரயில் டிக்கெட்டுகளை போலியாக அச்சிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக வெங்கட் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top