Connect with us

Raj News Tamil

அரசு பள்ளி ஆசிரியர் வயிற்றில் கத்தியால் குத்திய 12-ஆம் வகுப்பு மாணவன்.. பரபரப்பு சம்பவம்..

இந்தியா

அரசு பள்ளி ஆசிரியர் வயிற்றில் கத்தியால் குத்திய 12-ஆம் வகுப்பு மாணவன்.. பரபரப்பு சம்பவம்..

தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராபூரி பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர், கடந்த வியாழக்கிழமை அன்று, தனது ஆசிரியரை கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார்.

இதனைக் கண்ட சக மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, காயம் அடைந்த ஆசிரியரை மீட்ட சக ஊழியர்கள், பி.எல். கபூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த மாணவனை கைது செய்தனர். அரசு பள்ளி மாணவன், ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top