Connect with us

Raj News Tamil

பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கிய கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

தமிழகம்

பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கிய கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். இவர் கோவை சூலூரில் தங்கி அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இதனிடையே நேற்று இரவு ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பரோட்டா சாப்பிட்டுவிட்டு, தனது அறைக்குச் சென்று தூங்கியுள்ளார்.

இன்று காலை ஹேமச்சந்திரன் படுக்கையில் அசைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சூலூர் காவல் துறையினர் மாணவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் நேற்று 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தற்போது கோவையில் கல்லூரி மாணவர் மாரடைப்பால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top