Connect with us

Raj News Tamil

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசு – காங்கிரஸ் எதிர்ப்பு

இந்தியா

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசு – காங்கிரஸ் எதிர்ப்பு

நாட்டின் முதல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பின்னர் கடந்த 1964-ம் ஆண்டில் டெல்லி தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகம் மற்றும் நூலகம், நவீன இந்தியாவின் மேம்பட்ட மேம்பட்ட ஆராய்ச்சியை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மோடி அரசின் அற்புதமான பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top